உள்ளத்து உறவுகளும் பயமளிக்கும் விந்தை !

அதிக நெருக்கம் உள்ள உறவுகளில்
பயமும் வந்து ஒட்டிகொள்கிறது!

உடைந்து போனாலும் வலி !
பற்றி இருந்தாலும் வலி !

அது, பற்றி எறியும் நெருப்பினூடே
பயந்து சாவும் பஞ்சைப் போன்றது !
நாம் நெருப்பானால்
விலகி போகும் பஞ்சு
சாம்பலாகி வலி கொடுக்கும்!
நாம் பஞ்சானால்
நெருப்பின் சூடு
நம்மை சுட்டு பொசுக்கும் !

பயம் மறைய
வலி குறைய
இரண்டுக்கும் தேவை
வெற்றிடம் நிரம்பிய இடைவெளி !




கருத்துகள்