இடுகைகள்

அக்டோபர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒவ்வொரு பெண்ணிற்கும் கனவுண்டு!

பதினாறு வயதில் சிட்டாய் பறந்து கொண்டிருந்த  பூக்காரியின் மகளுக்கும் தன்னவனைப் பற்றி பல கனவுகள் இருந்தது குடிகார அத்தை மகனுக்கு வாக்க பட்டு  முதல் அடி முதுகில் விழும் வரை ! 

இனிய சனி !

அன்று காலை விழித்ததும் நினைக்கவில்லை இன்று நான் என்னை புதிதாய் உணர்வேன் என்று. என்றும் போல விழித்த கண்கள் மூடிக்கொண்டன. 7 மணி என்ற போதும் எழலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருந்தது மனம். அரை தூக்கத்தில் இருந்த என்னை பக்கத்துக்கு அறையில் இருந்து எழுந்து வந்து எனது தோழி எழுப்பினாள். அவளது அலுவலகத்தில் இருந்து வாரா வாரம் பக்கத்துக்கு தெருவில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று அவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள். திடீரென அவள் என்னிடம் "நீயும் வாயேன் சௌமி" என்று கூறினாள். அட, நல்ல யோசனை. வீணாய் பொழுதை கழிப்பதை காட்டிலும் இது ரொம்ப நல்ல விஷயம் அல்லவா?  பட படவென எழுந்து கிளம்பி விட்டேன். ஒன்பதே முக்காலுக்கு தயாராக நிறுத்தத்தில் போய் நின்று விட்டோம். பக்கத்துக்கு KR bakery -இல்  ஒரு பப்ப்ஸ், ஒரு காபியோடு காலை உணவை முடித்து விட்டு அவர்களது organizer  காக காத்திருந்தோம்.  அவர் வந்ததும் ஒரு cab -இல் அனைவருமாக பள்ளியை அடைந்தோம். அறிமுகங்கள் முடித்து, பள்ளிக்குள் சென்றோம். எங்களுக்கு ஆறாம் வகுப்பு. அவர்களுக்கு மணியின் அளவைகளை சொல்லி தரும் வேலை.  நாங்கள் நான்கு பே

எனது கோபம்

நெருப்பால் காற்றோடு கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் கரைந்து போகும்  கற்பூரம் போன்றது  எனது கோபம் !  கல் போல கடுமையாக எண்ணி தள்ளி நிற்க வேண்டாம் ! நிற்கும் முன் நினைக்க, எறும்பு ஊற கல்லும் தேயும்  என்பது பழங்காலந்தொட்டு விளங்கும் மொழி ! 

காற்றோடு பேசிய கவிதை!

காற்றோடு கவிதை பேசிக்கொண்டிருந்தேன் நேற்று ! தென்றலாய் எனது கூந்தலோடு  ஓடிப்பிடித்து விளையாடி கொண்டிருந்தது ! பிடித்து நிறுத்தி கேட்டேன் 'வரும் வழியில் நீ அள்ளி வந்தது என்ன?' என்று ! பூக்களாய் சிரித்து விளையாடிய சிறு பிள்ளைகள்  வெள்ளை மனம் என்றால் என்ன என்பதை நினைவுபடுத்த ! மான் போல் துள்ளி ஆடிய பூவையர்கள்  மகிழ்ச்சி என்பது என்ன என்று காட்ட !  மாலை நேரத்தில் களைப்போடு வந்தாலும்  பிள்ளைக்கு முறுக்கும் மனைவிக்கு மல்லிகை பூவும் வாங்கி போன கணவன் குடும்பம் குதூகலம் என்று சொல்ல ! சொல்லி கொண்டே போனது பலப்பல விஷயங்களை ! 'அடுத்து எங்கு செல்கிறாய்?அங்கு என்ன சொல்வாய்?' என்று கண்ணடித்து கேட்டேன்  'ஒரு மின்னல் என்னை தாக்கியது' என்பேன் என்றது ! :P

எனது இதயம்!

எப்படி சொல்வேன்  எனது இதயம்  கல்லாய் கிடக்கவில்லை! தண்ணீராய் உறைந்து கிடக்கிறது ! நீ அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும்  அது கண்ணீர் சிந்தும் !

என் தோழியின் கதை ! ;)

Funny moments! :D :D *Unforgettables* நான் அப்போ மூன்றாம வகுப்பு படிச்சிட்டு இருந்தன் . எங்க கிளாஸ்ல  மொத்தம் 30  பேர் இருந்தோம். 15  சீட்ஸ் இருந்துச்சு. என் கூட சண்ட போடன்னே ஒருத்தன் இருந்தான். என் பக்கத்து seat- ல உக்காந்துட்டு வம்பு பண்ணிகிட்டே இருப்பான். இந்தியா பாகிஸ்தான் சண்டைய கூட தடுத்து நிறுத்திடலாம். ஆனா எங்களுக்குள்ள வர்ற Border சண்டைய கிளாஸ் டீச்சரே வந்தா கூட நிறுத்த முடியாது.  அன்னிக்கு அப்டிதான் கிளாஸ்ல மிஸ் maths கணக்கு பாடம் எடுத்திட்டு இருந்தாங்க. எழுதற அவசரத்துல என்னோட புக் Border -அ கொஞ்சமா தாண்டி போயிடுச்சு. நா அத கவனிக்கலங்க. கிளாஸ் முடிஞ்சு பாத்தா புக் காணாம போய்டுச்சு :( . என்னடானு பாத்தா,"புக் border -அ தாண்டி போய்டுச்சு! அதனால தூக்கி போடுட்டண் ! " அப்டின்னு சொல்றான். எவளோ கோவம் வந்துச்சுன்னா அப்டியே மிஸ் கிட்ட கூட complain  பண்ணாம அழ ஆரமிச்சுட்டன்! :( இத கூட மன்னிச்சு விட்ரலாம் போங்க ! எங்க ஸ்கூல்- ல அன்னிக்கு independence  day celebration . எங்க கிளாஸ் parade போறத பாக்க ஆசையா இருந்துச்சு. அதனால நா முன்னாடி போய் உக்காந்துகிட்டு இருந்தன்.