இடுகைகள்

பிப்ரவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேய் படமும் சாவும்

படம்
ஏதோ திகில் படம் பார்த்து முடித்த மாதிரி இருந்தது  கண் முழித்த போதே. கனவா நிஜமா என்று விளங்கவில்லை. என்ன கருமமோ, கல்லூரிக்கு நேரமாச்சே என்று பதறியடித்து, எப்பவும் போல, கடைசி 5 நிமிடத்தை  தெய்வமாகக் கும்பிட்டு முடித்து,  பேருந்தைப் பிடிக்க ஓடி கொண்டிருக்கிறேன். நான் தேஜா. நேற்று இரவு எனது தோழி  கொடுத்த திகில் படம் ஒன்றை இரவு ஒரு மணி வரை கண் முழித்து பார்த்துக் கொண்டிருந்தேன். உடனே  நான் பேய் படம் பாத்தாலும் பயப்படாத பொண்ணு என்றெல்லாம்  நினைத்துக் கொள்ள வேண்டாம்.பயத்த வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேயையும் கிண்டலடித்துக் கலாயித்துப் படம் பார்க்கும் ஜாதி நான். திடீரென்று உணருகிறேன். பேருந்து நிறுத்தத்திற்கு ஓடி கொண்டிருந்த நான் இப்போது எங்கே ஓடுகிறேன் என்றே தெரியவில்லை. ஒன்றும் புரியாமல், கால்களை நிறுத்த முயல்கிறேன். நிற்க மாட்டேன் என்று எதோ திசையில் ஓடிகொண்டே இருக்கின்றன என் கால்கள். கண்கள் சுற்றும் முற்றும் பார்க்கின்றன. இடம் என்னவென்று புலப்படுகிறதா என்று மூளையிடம் கேட்கின்றன. குழப்பம். அங்கே ஒரு தூண் கம்பி தெரிகிறது கண்களுக்கு. மூளை கைகளிடம் அதை பிடித்து உன் கால்களை நிறுத்து எ