இடுகைகள்

அக்டோபர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சோகம் தீர்த்தல்!

ஆழ்ந்த சோகம் ! எழுதித் தீர்க்கலாம் என பேனாவும் காகிதமுமாய் தயாராகிறேன்! பேனா எழுத ஆரம்பிப்பதற்குள் கண்ணீர் அது முந்திக் கொண்டது ஈரமான காகிதம்! ஈரமான கண்கள்! யோசிக்கிறேன் எதற்கு இந்த சோகம்? எழுத வரவில்லை எதுவும்! திரும்ப யோசிக்கிறேன் யாரைக் குறை சொல்லலாம்? யார் யாரோ உன்னை சோகப்படுத்தினார்களோ? கேட்டுக் கொண்டேன் பதில் கிடைக்காமல்! சில நேரங்களில் சில மனிதர்கள் நினைத்துக் கொண்டேன்! பேனா எழுதியது 'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமாம்' காகிதத்தின் ஈரம் காய்ந்திருந்தது!!