இடுகைகள்

ஜனவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உரக்க எழுதுவேனா

பேனா மையின் கடைசி துளியால் எனது கதைப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் நான் எழுதிய உனது பெயர் உரக்க ஒலிக்கவில்லையா? அது பார்த்திருக்கப்படவேண்டியது! நமது கதையின் பிள்ளையார்சுழி! நீயோ பாராமலே போய்விட்டிருந்தாய்!! நான் எழுத விரும்புகிறேன், முதல் பக்கத்திலிருந்து! நான் நீ நாம் என்ற கதையை! முடிவிலாப் பக்கங்களைக் கொண்ட புதிய புத்தகத்தில்! இம்முறை உரக்க எழுதுவேனா?!

இரு தலைக் கொள்ளி எறும்பு !!

இரண்டில் ஒன்று தொடு - என்று விளையாடி வென்று முடிவெடு  என்றார் சிறுபிள்ளைத்தனமாக !!  ஒன்று தன் மகிழ்ச்சி!!  மற்றொன்று அடுத்தவர்  மகிழ்ச்சி !!  இரண்டுமே மிகத் தேவை! ஆனால்  கொடுக்கப்பட்டது ஒரு வாய்ப்பு !! இப்படித் தான் தவிக்குமோ  இரு தலைக் கொள்ளி எறும்பு ??!!