ஜன்னலோர பயணம் !
ஓடி போய் பேருந்தில் ஏறி கொண்டேன். கண்கள் அலைபாய்கிறது. ஆஹா ! கண்டேன் சீதையை என கிடைத்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன் . நெரிசல் இல்லை. அடுத்த நிறுத்தத்தில் என் அருகே அமர்ந்திருந்த அம்மாள் இறங்கிக்கொள்ள , ஆஹா கிடைத்தது ஜன்னலோரம் எனக்கு. நான்கு மணி நேரம் அல்லவா பயணம் ! காட்சிகள் விரிய தொடங்கின ! முதலில் பார்வைக்கு வந்தவர் தள்ளாத வயதிலும் ஓடியாடி நிலகடலை விற்றுகொண்டிருந்த தாத்தா. பார்த்ததும் தோன்றியது உழைக்காமல் படுத்து உண்ணும் சோம்பேறிகளுக்கு இவர் ஒரு பாடம் ! பேருந்து நிலையத்தை விட்டு நகர தொடங்கியது பேருந்து. அட, அவனும் அவளும் தோழர்களோ காதலர்களோ! அவன் காதில் headset ஐ மாட்டி பாட்டு கேட்கிறான். அவளோ தான் பேசுவதை தா...