இடுகைகள்

ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைப்பது யாரோ !

விக்கல் எடுக்கிறது எனக்கு ! நேற்று நான் வாங்கிய  100 ரூபா பூவுக்கு  இன்று தன் பிள்ளையிடம் என்னை  பெருமை பேசுகிறாள் பூக்காரி! எனது தாத்தாவின் எண்ண அலைகளில் நான் இன்று ஓடி கொண்டிருந்தேன் முன்னாடி வாங்கி தந்த கண்ணாடியினால் ! தம்பிக்கோ எந்நேரமும் இந்த அக்கா தான் எப்போ லேப்டாப் கிடைக்கும் ! எப்போ கேமரா என்று ஆசையால் ! அம்மாவுக்குள்ளும் நான் தான்  இப்போ ஓடி கொண்டிருந்தது ! சாப்பிட்டேனோ என்னமோ என்பதனால் ! நான் சொன்ன கதைகளையும்  நாங்கள் கதைத்த கதைகளையும் என்னையும் சேர்த்து கனவில் சிரித்தாள் என் அருமை தோழி ! ஆனால், எனக்கு நீ தான் நினைக்க வேண்டும் ! விக்கல் இன்னும் நிற்கவில்லை !