இடுகைகள்

ஏப்ரல், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மௌனமே மொழி ஆதல்!

கருவாய்  உதித்து காலால்  உதைத்து உருண்டு  பிரண்டு வெளியில்  வரும்வரை அவளுக்கும்  எனக்கும்  நடந்த   உணர்வு  பரிமாற்றங்கள் ! திடீரென  கண்ணுக்குள்  ஏதோ  வெள்ளை  பந்து  போல் பாய்ந்து  வந்தது முதல்  முறையாக  அழுகிறேன் ! உள்ளிருந்த  போதும்  அழுதேனோ ?! மௌனம் ! வெதுமையாய் வெள்ளை  துணிக்குள் அவள்  பக்கத்தில்  கிடக்கிறேன்  மௌனமாய்! கண்களில் சிறு  துளி  கண்ணீரோடு மௌனமாய் தடவி  விடுகிறாள் ! என்  ஒவ்வொரு  அசைவையும்  புரிந்து  நிகழ்கிறாள்!  ஸ்பரிசிக்கிறாள்!  சுவாசிக்கிறாள் ! அவளை  சுற்றி  விழுந்த ஆயிரம்  வார்த்தைகளையும்  வெல்ல  கூடியதாய்  உள்ளது எந்தன்  மௌன  மொழி!

துணைவி துணை இன்றி !

தனிமை அவரை வாட்டியிருக்கவில்லை ! விருந்துக்கு அழைத்த தன் பெண் தன்னிடம் பேசாமல் பரபரப்பாய் ஓடிகொண்டிருந்தபோதும் ! ஓரமாய் தான் பாட்டுக்கு உட்கார்ந்து ஒரு தூணை வெறித்து பார்த்த படி பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தார் ! 50 வருடங்களுக்கு முந்தைய படம் நிழலாய் நினைவுகளில் ! சும்மா காடு வீடு என சுற்றி கொண்டிருந்தவனுக்கு திருமணம் ! என்னதான் எல்லாரிடமும் பயம் இருந்தாலும் தனக்கென வருபவளிடம் மட்டும் வீராப்பு சொல்லித்தராமல் வருவது ! அதை செய்  இதை செய் என்ற அதட்டலோடும்,சில அடி தடியோடும் 2 பிள்ளைகள் ! ஒரு ஆண் ஒரு பெண் ! பெண்ணுக்கு திருமணம் முடித்து புகுந்த வீட்டுக்கு அனுப்பியாயிற்று ! அதட்டல் தொடர்கிறது ! பையனுக்கும் திருமணம் முடித்தாயிற்று ! அதட்டல் விட்டு போகவில்லை ! பேத்தி பேரன்கள் என ஒவ்வொரு பண்டிகையும் ஒரு திருவிழாவாகவே இருந்தது அந்த வீட்டில் ! அன்றும் அதட்டல் தொடர்ந்தது ! ஒரு நாள், அவள்  சொர்கலோகம் பார்க்க வேண்டும் என்ற விடாத ஆசையால் சொல்லாமல் சென்று விட்டாள்  ! அப்பொழுது முதல் எதிர்பார்ப்புகள் எதிர்பார்த்திருக்க படவில்லை ! தூணு

நீ ஏன் காதலிக்கவில்லை ??

என்னை பார்த்து ஒரு கேள்வி ! நீ ஏன் காதலிக்கவில்லை ?? என் காதல் கதைகளை தான் கேளுங்களேன் ! அந்தி மாலை வேளையில் செவ்வானத்துக்குள் சென்று சூரியன் ஒளிந்துகொள்ள அவனை துரத்திய படியே கரு நீல வானத்தில் வெள்ளை பந்தாய் திரியும் வெண்ணிலவு என் முதல் காதல் ! திருட்டு பூனை என்ற புனை பெயர் இருந்தாலும் எங்கள் வீட்டு பூனை சர்க்கரை கற்கண்டு ! கூப்பிட்ட உடன் ஓடி வந்து எட்டி பார்க்கும் என் கிளீஸ் குட்டி எனக்கு இரண்டாவது காதல் ! செடி வளர்ந்து பூ விரியும் நேரம் வசந்த காலமே வாழ்கையில் வந்தது போன்ற மகிழ்ச்சி ! ரொம்ப நாளாய் ஆசை பட்டு தண்ணீர் பாட்டிலில் வீடு கட்டி ரகசியமாக தங்கவைத்துள்ள  டேபிள் ரோஜா செடி என் மூன்றாவது காதல் ! தனியாய் இருக்கும் நேரங்களில் அவன் தான் எனக்கு ஆறுதல் ! அவனை எடுத்து நளினமாய் நாலு கிறுக்கல் கிறுக்கினால் குழப்பங்கள் காணமல் போகும் கலர் கலராய் கனவுகள் வந்து ஒட்டி கொள்ளும் ! எனது பெயிண்ட் டப்பா தான் என் அடுத்த காதல் ! ஹச்சிகோ-வையும் மைலோ-வையும் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஏக்கம் ! என்னை விடாது தொரத்தும் கண்கள் மின்ன என்னை பார்த்து வாலாட்டி வரும் ஒரு குட

அம்மாஞ்சி Professor -உம் Project Spectacles-உம் !

Project Spectacles- ஐ  பற்றி கேள்வி பட்டவுடன் முடிவு செய்து விட்டேன், மார்க்கெட்- க்கு வந்ததும் முதல் ஆளாய் போய் வாங்கி உபயோகித்து பார்த்து விட  வேண்டும் என்று. ஊர் பூராமும் அதை பற்றி தான் பேச்சு. "அது  ரொம்ப  stylish ஆக இருக்குதாமா டா" "ஆமா  டா.. அதே  சமயம் நம்ம கண்ணாடி போட்டிருந்தாலும் easy ஆக use பண்ணிக்கலாமா மச்சி" "எங்க இருந்தாலும் நம்ம காதலிய மிஸ் பண்ணாம பேசிட்டே, பாத்துட்டே இருக்கலாம் டா  " "சாத்துடா  அவன.. அடங்கவே மாட்டானா ??!" காலேஜ்-குள்ள   enter  ஆனதும்  காதில்  விழும்  முதல் பேச்சு இப்படி  தான். நான் எடுக்கிற  கிளாஸ்-அ  கவனிக்ரான்களோ இல்லயோ  , Project Spectacles அ  பத்தி பேசிட்டே  இருக்கானுங்க  இந்த பசங்க  ! இந்த பொண்ணுங்களாவது படிப்ப பத்தி பேசுவாங்கன்னு paaththa , anga library ல ukkanthu   "aeii, இந்த கண்ணாடி super dee.. நம்ம ஆள thontharavu pannittae  இருக்கலாம்!" " ivalukku iva prachina dee.. நம்ம thaniya camera வாங்கி போட்டோ எடுக்க வேணாம் ! இதுவே pothum ! jolly-ல ? " "ஆமா ஆமா டி.. "