இடுகைகள்

செப்டம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காத்திருத்தல் ~

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிக்கு ரதம் போல வந்து சேரும் பேருந்து ! வழி மேல் விழி வைத்து தன் ரதிக்காக காத்திருக்கும் காதலன் போல நானும் காத்திருப்பேன் என் ரதத்திற்காக ! கடிகார முள்ளோ மெது மெதுவாய் தடிஊன்றி நடந்து செல்லும் ! டிக் டிக் என்ற அதன் காலடிகள் நான் தான் தாலாட்டு என்றென்னை வாட்டும் ! காத்திருந்து கண்கள் பூத்து போய் விடும் கேள்வி பட்டிருக்கிறேன் ! என் ரதத்திற்காக காத்து என் கண்களோ பூத்து வாடி காய்ந்தே போய் விடும் ! அட .. அதோ வருகிறது பேருந்து ! வாசலிலே வரவேற்க வாழை மரம் இருப்பது போல் பேருந்து வாசலிலே தள்ளி கொண்டு பயணிகள் வந்தால் அப்பொழுது புரியும் காத்திருத்தலின் கொடுமை என்னவென்று ! இந்த சாம்ராஜ்யம் தங்களது இளவரசி என்பது போல் காற்றை மட்டுமே இருத்தி கொண்டு பேருந்து வந்தால் மனதுக்குள் சீட்டி பறக்கும் காத்திருத்தலின் அருமை புரியும் !

சிறு துளிகள் !

எனக்கு திமிர் என்றும் மதிக்கத் தெரியாதவள் என்றும் கூறுபவரிடம் என்னை பற்றி கேட்டு விட்டு பாருங்கள் அவர்கள் திரு திருவென்று முழிப்பதை !! #வெறும் வாய்க்கு நாலு அவல் தேவை !:-P விருந்தில் சக்கரைப் பொங்கல் மட்டும் இருந்தால் விருந்து பூர்த்தியாகாது என்று தெரிந்தும் சிரிப்பை மட்டுமே நாடுகிறது மனது ! #mystery