உரக்க எழுதுவேனா

பேனா மையின் கடைசி துளியால்
எனது கதைப் புத்தகத்தின்
கடைசிப் பக்கத்தில்
நான் எழுதிய
உனது பெயர்
உரக்க ஒலிக்கவில்லையா?

அது பார்த்திருக்கப்படவேண்டியது!
நமது கதையின் பிள்ளையார்சுழி!
நீயோ பாராமலே போய்விட்டிருந்தாய்!!

நான் எழுத விரும்புகிறேன்,
முதல் பக்கத்திலிருந்து!
நான் நீ நாம் என்ற கதையை!

முடிவிலாப் பக்கங்களைக் கொண்ட
புதிய புத்தகத்தில்!
இம்முறை உரக்க எழுதுவேனா?!

கருத்துகள்