சொன்னதை கேட்கும் மனம்

கூடாது கூடாது என்று சொன்னால்தான்
நினைப்பேன் நினைப்பேன் என்று
சொல்லாமல் சொல்லி அடம்பிடிக்குது  !

விட்டு விடு விட்டு விடு என்று
பலமுறை கூறி விட்டேன்
கேட்டுகொண்டதாய் தெரியவில்லை !

திரும்பி திரும்பி பார்க்காதே
ஒன்றும் வேலைக்காகாது என்றேன்
கண்கள் முன் நோக்கவில்லை !

சரி போனால் போகிறது
இந்த ஒரு முறை மட்டும் என்றபடி
10 ரூபாயை எடுத்து கொடுத்து
வங்கிக்கோ  ஐஸ் கிரீம் என்றதும்
மனம் நான் சொன்னதை கேட்டு
நடந்ததாய் தோன்றியது !!




கருத்துகள்

  1. நீங்கள் எழுதும் பல கவிதைகளில் கிளைமாசில் ஒரு பெரிய திருப்பம் இருக்கு! இப்ப நாங்க சொன்னதை உங்க மனம் கேட்கின்றதா ;)

    பதிலளிநீக்கு
  2. என் மனதுக்கு சிறு ஒலியாக கேட்கின்றது !! முழுதாய் விளங்கவில்லை என் கவிதையை போலவே ! :P

    பதிலளிநீக்கு
  3. இநதக் கவிதை ஒரு நல்ல முயற்சி, இதைவிட இயல்பான உணர்வுகளுக்கான கவிதைகள் இன்னும் காத்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக