பயமும் கண்ணாம்பூச்சியும்



பயம் ஒரு ஒற்றுண்ணி!
குற்றுயிரும் குலையுயிருமாய்
கூடவேதான் சுற்றுவான் அவன்!

அவனுக்கு சோறு போடவே
சில மனிதர் உண்டு !
அவரிடத்தில் மட்டும்
செல்லம் கொஞ்சிப் பெருத்தாடுவான்!

மற்றவரிடத்தில் 
அவனை  மறந்தும் ஒளித்தும்,
கராத்தேயும் குங்ஃபூவும்
தெரியாத போதும்
தைரியசாலியாகவே 
நாம் வாழ்கிறோம் !

கருத்துகள்