இதயம் மூளை என்னும் முரண்கள் !!

இதயம் மூளை என்று 
இரண்டு இடங்கள்  எதற்கு ? 
இறைவனை பார்த்தால்  கேட்க வேண்டும் !

இதயம் மட்டும் இருந்திருந்தாலே 
மகிழ்ச்சி நெகிழ்ச்சி அடைய செய்திருக்கலாம் 
நம் எல்லாரையும் !

சாப்பிட 2 ரூபா வேண்டும் என 
சாலையில் போகும் பாட்டி கேட்டாள் 
இதயம் தந்து விடு என்றது 
வலக்கை கொடுத்ததை இடக்கையாய் வந்து 
தடுத்துச் சென்றது மூளை !! 

பளிச்சென பார்ப்பதை பிடிக்க 
நல்லதொரு புகைப்படக்கருவி 
வாங்கச் சொன்னது என் மனம் ! 
மேலும் கீழுமாய் நாலும் ஏழும் என 
கணக்கு பார்த்து தடை விதித்தது 
அம்மாவின் மூளை !! 

எதிரில் போவோரை பார்த்து 
புன்னகைத்து நாளை நல்லதாக்கச் 
சொல்லுது மனம்   !! 
சிரிக்காதே பூச்சாண்டி 
பிடித்து கொள்ளும் 
பயம் காட்டுது மூளை ! 

போனால் போகட்டும் -
மன்னித்து விடும் மனம் ! 
அன்று அதை இன்று இதை நாளை எதையோ என 
போக விடாமல் இழுக்கும் மூளை ! 
கடவுளை பார்க்கும் போது 
கேட்க வேண்டும் 
இதயம் மூளை என 
இரண்டு முரண்கள்  எதற்கு என்று ? 

கருத்துகள்