நினைப்பது யாரோ !



விக்கல் எடுக்கிறது எனக்கு !

நேற்று நான் வாங்கிய 
100 ரூபா பூவுக்கு 
இன்று தன் பிள்ளையிடம் என்னை 
பெருமை பேசுகிறாள் பூக்காரி!

எனது தாத்தாவின் எண்ண அலைகளில்
நான் இன்று ஓடி கொண்டிருந்தேன்
முன்னாடி வாங்கி தந்த கண்ணாடியினால் !

தம்பிக்கோ எந்நேரமும் இந்த அக்கா தான்
எப்போ லேப்டாப் கிடைக்கும் !
எப்போ கேமரா என்று ஆசையால் !

அம்மாவுக்குள்ளும் நான் தான் 
இப்போ ஓடி கொண்டிருந்தது !
சாப்பிட்டேனோ என்னமோ என்பதனால் !

நான் சொன்ன கதைகளையும் 
நாங்கள் கதைத்த கதைகளையும்
என்னையும் சேர்த்து கனவில் சிரித்தாள்
என் அருமை தோழி !

ஆனால், எனக்கு நீ தான் நினைக்க வேண்டும் !

விக்கல் இன்னும் நிற்கவில்லை !


கருத்துகள்

  1. சரி உங்கள் எதிரில் யாரவது இருந்தால் அவர்களுக்கு: சட்டென்று ஒரு கத்தி எடுத்து குத்த போங்க - விக்கல் நிற்கட்டும் :P

    பதிலளிநீக்கு
  2. :D பாஸ் எதிரில் இருப்பவர் தான் என்னை குத்த வர வேண்டும் ! :P

    பதிலளிநீக்கு
  3. : - இருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? அந்த தகவலை உங்கள் எதிரில் இருப்பவருக்கு தான் சொன்னேன் :ப

    பதிலளிநீக்கு
  4. ஓ ! நீங்கள் சரிதான் ! நான் தான் தவற விட்டேன் ! :D நல்ல யோசனை :P

    பதிலளிநீக்கு
  5. "ஆனால், எனக்கு நீ தான் நினைக்க வேண்டும். " .? Purila villaiyadi..:).. amma kaga vandha vikkal I liked de..:):)

    பதிலளிநீக்கு
  6. ஆனால், எனக்கு நீ தான் நினைக்க வேண்டும். " .? Purila villaiyadi..:).. amma kaga vandha vikkal I liked de..:):)



    -- Thendral..:)

    பதிலளிநீக்கு
  7. Purinjutha ? Purilaya ? :D


    Bulb erinjutha eriyala ? :D

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக