நினைவினில் வந்தது ! :)

கனவுகளின் விளைவுகள்

அதிகாலை வந்தது ஒரு கனவு !
படக்கென எழுந்ததை பார்த்து அம்மா கேட்டாள் !!

என்ன டி ஆச்சு ??
ஏதோ தீய கனவம்மா !
அலுப்புடன் நான் !

படுத்திருந்த பாட்டி சாங்கியம் சொல்கிறாள் !
காலைல காணுற கனவு பலிக்குமடி !

ஐயோ போங்க பாட்டி ! என்றபடியே
திரும்பி படுத்தாலும்
அன்றைய நாளை இவ்வெண்ணம்
வீணடிக்கும் என்பதை அறியாமலில்லை
அடங்காது அலை பாயும் என் மனது!

கருத்துகள்

கருத்துரையிடுக